பதிவு செய்த நாள்
31 ஜன2022
01:38
‘கோவிட்’ பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக, இளம் தலைமுறையினர் மத்தியில் சேமிப்பு மற்றும் காப்பீடு பாதுகாப்பில் ஆர்வம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நிதிச் சேவை நிறுவனமான ‘கேஸ்ஹி மில்லினியல்’ என்று குறிப்பிடப்படும் இளம் வயதினர் மத்தியில், நாடு தழுவிய அளவில் நடத்திய ஆய்வில், பெருந்தொற்றுக்கு பின், சேமிப்பு, காப்பீடு தொடர்பான அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 52 சதவீதம் பேர் தங்கள் சேமிப்பை அதிகமாக்கி உள்ளதாகவும், 32 சதவீதம் பேர் விரிவான மருத்துவ காப்பீடு பெற்றிருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
கோவிட் பாதிப்பிற்கு பின், தினசரி வாழ்க்கை மற்றும் நிதி பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டறியும் நோக்கத்துடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு காரணமாக, ஆரோக்கியம் மீதான அக்கறை அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில், 71 சதவீதம் பேர் ஆரோக்கியம் தொடர்பாக அதிக விழிப்புணர்வு கொண்டுள்ளனர்.மேலும், 52 சதவீதம் பேர் வீட்டு உணவை சாப்பிடுவது ஆரோக்கியமானது எனத் தெரிவித்துள்ளனர் மற்றும் 28 சதவீதம் பேர் தினசரி நடைபயிற்சி மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|