பதிவு செய்த நாள்
02 பிப்2022
21:56
புதுடில்லி:‘ஏர் இந்தியா’வை பயணியரின் விருப்பமான நிறுவனமாக உருவாக்குவதில், டாடா குழுமம் உற்சாகமாக உள்ளது என, ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்தின் கைகளுக்கு சென்று சேர்ந்துவிட்ட நிலையில், குழுமத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா, 19 நொடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.அதில், ‘பயணியரின் வசதி மற்றும் சேவையின் அடிப்படையில், ஏர் இந்தியாவை விருப்பமான விமான நிறுவனமாக மாற்ற, அதனுடன் டாடா குழுமம் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, சில ஏர் இந்தியா விமானங்களிலும் ஒளிபரப்பப்பட்டது என, விமான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, ஏலத்தில் வாங்குவதற்கான போட்டியில், இறுதியில், டாடா குழுமம் வெற்றி பெற்றது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 27ம் தேதியன்று, ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்தை சேர்ந்த ‘டாலஸ்’ நிறுவனத்தின் வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.டாலஸ் நிறுவனம், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுத்தது. 2,700 கோடி ரூபாயை ரொக்கமாக வழங்கி, மீதம் 15,300 கோடி ரூபாய் கடனை தன் வசமாக எடுத்துக் கொண்டது டாலஸ் நிறுவனம்.இதையடுத்து ரத்தன் டாடா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|