பதிவு செய்த நாள்
03 பிப்2022
20:51
புதுடில்லி:ஜனவரி மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 51.5 புள்ளிகளாக குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய டிசம்பரில் 55.5 புள்ளிகளாக அதிகரித்து இருந்தது. இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.
கடந்த ஆறு மாதங்களாக சேவைகள் துறை உற்பத்தி அதிகரித்து வந்திருந்த போதிலும், ஜனவரியில் மிகவும் குறைவான வளர்ச்சியை கண்டுள்ளது.தொற்று நோய் பரவல் அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவை காரணமாக, சேவைகள் துறை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வணிகம் மற்றும் உற்பத்தி ஆகிய இரண்டும், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்த அளவிலான வளர்ச்சியையே கண்டு உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|