பதிவு செய்த நாள்
03 பிப்2022
22:13
‘கியா’வின் ஏற்றுமதி சாதனை
‘கியா இந்தியா’ நிறுவனத்தின் இதுவரையிலான மொத்த வாகன ஏற்றுமதி, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.இந்நிறுவனம், 2019ம் ஆண்டு செப்டம்பரில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை துவங்கியது. இரண்டரை ஆண்டுகளுக்குள்ளாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
கூட்டு ‘சார்ஜிங்’ திட்டம்
‘டாடா பவர்’ நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க, ‘அப்போலோ டயர்ஸ்’ நிறுவனத்துடன கூட்டு வைத்துள்ளது.இருசக்கர வாகனத்தில் துவங்கி, பேருந்துகள் வரையிலான மின்சார வாகனங்களுக்கு தேவைப்படும் சார்ஜிங் வசதி, டாடா பவர் நிறுவனத்திடம் உள்ளது.
பங்கு விலக்கல் முயற்சி
ஷிப்பிங் கார்ப்பரேஷன், பி.இ.எம்.எல்., – பி.பி.சி.எல்., ஆகிய மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அடுத்த நிதியாண்டில் தனியார்மயமாக்கப்படும் என தெரிகிறது.அடுத்த நிதியாண்டில், பங்கு விலக்கல் இலக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டு இலக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய்.
வழிவிடும் ‘இமாமி’ நிறுவனர்கள்
நுகர்பொருள் பிராண்டான ‘இமாமி’யின் நிறுவனர்களான, ஆர்.எஸ்.கோயங்கா மற்றும் ஆர்.எஸ்.அகர்வால் ஆகியோர் பொறுப்பிலிருந்து இறங்கி, அடுத்த தலைமுறைக்கு வழிவிடுகின்றனர்.இவர்களது மகன்கள் மோஹன் கோயங்கா மற்றும் ஹர்ஷா அகர்வால் ஆகியோர் பொறுப்பேற்கின்றனர்.
விற்பனை சரிவில் ‘நோக்கியா’
‘நோக்கியா’ நிறுவனத்தின் இந்திய விற்பனை, கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 15 சதவீத சரிவைக் கண்டுஉள்ளது.கடந்த டிசம்பர் காலாண்டில், இந் நிறுவனத்தின் விற்பனை வாயிலான வருவாய், கிட்டத்தட்ட 2,113 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
‘ஏர் இந்தியா’ சி.இ.ஓ.,
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்த அலெக்ஸ் குரூஸ் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன.இருப்பினும், டாடா குழுமம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|