பதிவு செய்த நாள்
05 பிப்2022
21:59
புதுடில்லி:மத்திய அரசு, இந்த மாதத்துக்குள் முன்தேதியிட்ட வருமான வரி சம்பந்தமான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என, வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலீட்டுக்கு உகந்த இடமாக இருக்கும் இந்தியாவின் நற்பெயரை பாதித்த விஷயங்கள், முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வணிகத்தின் உரிமை வெளிநாடுகளில் மாற்றப்பட்டிருந்தாலும், அதன் சொத்துக்கள் இந்தியாவில் இருக்கும்பட்சத்தில், அவற்றுக்கு மூலதன ஆதாய வரியை விதிக்கும் அதிகாரம், கடந்த 2012ம் ஆண்டு சட்ட பிற்சேர்க்கை வாயிலாக வருமான வரி துறைக்கு வழங்கப்பட்டது.
50 ஆண்டுகளுக்கு முன்பு உரிமை மாறியிருந்தாலும் கூட, வரி விதிக்க, இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்தது.இதை அடுத்து ‘வோடபோன், கெய்ர்ன் எனர்ஜி, சனோபி’ என பல நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது முதலீட்டாளர்கள் மனதில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியது. வரி பிடித்தம் குறித்து நிறுவனங்கள் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்த மூலதன ஆதாய வரிவிதிப்பை அரசு வாபஸ் பெற்றது. மேலும் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப தருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கெய்ர்ன், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள், அரசு மீதான வழக்குகளை வாபஸ் பெற்றன.இதையடுத்து, நிறுவனங்களுக்கு அவற்றின் நிலுவை தொகை இம்மாதத்துக்குள் வழங்கப்பட்டு, பிரச்னைகள் முற்றாக தீர்த்து வைக்கப்படும் என தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|