பெரும் பணக்காரர்கள் பட்டியல்  அம்பானியை விஞ்சிய அதானி பெரும் பணக்காரர்கள் பட்டியல் அம்பானியை விஞ்சிய அதானி ...  இந்திய  ஹோட்டல் துறை முன்னேற்றம் காண வாய்ப்பு இந்திய ஹோட்டல் துறை முன்னேற்றம் காண வாய்ப்பு ...
‘இந்தியாவின் நற்பெயரை பாதித்த விஷயங்கள் தீர்த்து வைக்கப்படும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2022
21:59

புதுடில்லி:மத்திய அரசு, இந்த மாதத்துக்குள் முன்தேதியிட்ட வருமான வரி சம்பந்தமான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என, வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலீட்டுக்கு உகந்த இடமாக இருக்கும் இந்தியாவின் நற்பெயரை பாதித்த விஷயங்கள், முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வணிகத்தின் உரிமை வெளிநாடுகளில் மாற்றப்பட்டிருந்தாலும், அதன் சொத்துக்கள் இந்தியாவில் இருக்கும்பட்சத்தில், அவற்றுக்கு மூலதன ஆதாய வரியை விதிக்கும் அதிகாரம், கடந்த 2012ம் ஆண்டு சட்ட பிற்சேர்க்கை வாயிலாக வருமான வரி துறைக்கு வழங்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்பு உரிமை மாறியிருந்தாலும் கூட, வரி விதிக்க, இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்தது.இதை அடுத்து ‘வோடபோன், கெய்ர்ன் எனர்ஜி, சனோபி’ என பல நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது முதலீட்டாளர்கள் மனதில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியது. வரி பிடித்தம் குறித்து நிறுவனங்கள் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்த மூலதன ஆதாய வரிவிதிப்பை அரசு வாபஸ் பெற்றது. மேலும் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப தருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கெய்ர்ன், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள், அரசு மீதான வழக்குகளை வாபஸ் பெற்றன.இதையடுத்து, நிறுவனங்களுக்கு அவற்றின் நிலுவை தொகை இம்மாதத்துக்குள் வழங்கப்பட்டு, பிரச்னைகள் முற்றாக தீர்த்து வைக்கப்படும் என தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)