பதிவு செய்த நாள்
11 பிப்2022
20:10
‘ஹீரோ எலக்ட்ரிக்’ கூட்டு
‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்குவதற்கான நிதியுதவிக்காக ,எஸ்.பி.ஐ., உடன் இணைந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. இதனைஅடுத்து, வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்குவதற்கு, குறைந்த வட்டியில் வாகன கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
‘டாப் – 5’ல் இந்தியா
மிக எளிதாக புதிய வணிகத்தை துவங்குவதற்கு ஏற்ற ‘டாப் – 5’ நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‘துபாய் எக்ஸ்போ’வில் வெளியிடப்பட்ட, ஜி.இ.எம்., ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிதி பற்றாக்குறை குறையும்
வருவாய் பெருகத் துவங்கியவுடன், நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறையும் என்று, மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதமாக உள்ளது.
பாசுமதி அரிசி ஏற்றுமதி
நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, கடந்த ஆண்டில், 20 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. 2017ம் ஆண்டுக்கு பிறகு, முதன் முறையாக இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஈரானுக்கான ஏற்றுமதி, கிட்டத்தட்ட 26 சதவீதம் சரிந்தது, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி
நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த டிசம்பரில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 டிசம்பரில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 2.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|