பதிவு செய்த நாள்
11 பிப்2022
19:59
புதுடில்லி:உள்நாட்டு குளிர்பான பிராண்டு ‘தம்ஸ் அப்’, நடப்பு ஆண்டில் ‘பில்லியன் டாலர்’ பிராண்டு ஆக உயர்ந்துள்ளது.
தம்ஸ் அப் பிராண்டை, கடந்த 1993ம் ஆண்டில், ‘கோக கோலா’ நிறுவனம் கையகப்படுத்தியது. தற்போது, தம்ஸ் அப் பில்லியன் டாலர் பிராண்டாக அதாவது, தற்போதைய இந்திய மதிப்பில், 7,500 கோடி ரூபாய் பிராண்டாக உயர்ந்துஉள்ளது. தம்ஸ் அப், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன், 1977ல் அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், கோக கோலா நிறுவனம் இந்திய செயல்பாட்டில் அதன் பங்குகளை குறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, கோக கோலா நிறுவனம், இந்திய சந்தையிலிருந்து வெளியேறியது. இதனை அடுத்து, தம்ஸ் அப் சந்தையில் நுழைந்தது. மிக விரைவிலேயே வளர்ச்சி கண்டு சந்தையில் முன்னிலை வகிக்கத் துவங்கியது.
கோக கோலா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் குயின்ஸி கூறியதாவது:சந்தைப்படுத்தலில் மேற்கொண்ட கவனம் மற்றும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் காரணமாக, உள்ளூர் பிராண்டான தம்ஸ் அப், விற்பனையில் பில்லியன் டாலர் பிராண்டாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|