எல்.ஐ.சி., பங்கு வெளியீடு ஐ.ஆர்.டி.ஏ., அனுமதி வழங்கியது எல்.ஐ.சி., பங்கு வெளியீடு ஐ.ஆர்.டி.ஏ., அனுமதி வழங்கியது ...  ‘பில்லியன் டாலர்’ பிராண்டு  உயரம் தொட்ட ‘தம்ஸ் அப்’ ‘பில்லியன் டாலர்’ பிராண்டு உயரம் தொட்ட ‘தம்ஸ் அப்’ ...
‘டாடா சன்ஸ்’ தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
19:34

புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் தலைவராக, மீண்டும் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா
இது குறித்து, டாடா சன்ஸ் தெரிவித்துஉள்ளதாவது:நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டு செயல்பாடுகள் மதிப்பாய்வு செய்யப் பட்டு, நிறுவனத்தின் தலைவராக, மீண்டும் சந்திரசேகரனை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக, நிறுவனத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, கூட்டத்தில் தனது திருப்தியைத் தெரிவித்துஉள்ளார், ரத்தன் டாடா.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சந்திரசேகரனையே நீட்டிக்குமாறும் அவர் பரிந்துரைத்து உள்ளார்.இதனையடுத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக, சந்திரசேகரனை தலைவராக மீண்டும் நியமிக்க இசைவு தெரிவித்துஉள்ளனர்.
பதவி நீட்டிப்பு குறித்து சந்திரசேகரன் கூறியிருப்பதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமத்தை வழிநடத்தியது ஒரு பாக்கியம். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு டாடா குழுமத்தை அதன் அடுத்த கட்டத்துக்கு வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சந்திரசேகரன், கடந்த 2016ம் ஆண்டில், டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இணைந்தார். ஜனவரி 2017ல் தலைவராக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 2017ல் பதவி ஏற்றார்.மேலும் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார்.
‘ஏர் இந்தியா’இதற்கு முன், டாடா சன்ஸ் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரி உடனான சட்ட போராட்டத்தின் போது, அதை சமாளிக்கவும், நிறுவனத்தை வெற்றிகரமாக வழி நடத்தவும், நிறுவனத்துக்கு மிகவும் உதவியாக சந்திரசேகரன் இருந்துள்ளார். அடுத்து, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை கையகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.இத்தகைய காரணங்கள் அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்படுவதற்கு உதவியாக இருந்துள்ளது என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)