ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து  ‘ஓபோ’  5ஜி பரிசோதனை ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து ‘ஓபோ’ 5ஜி பரிசோதனை ...  வாகன துறைக்கான பி.எல்.ஐ., திட்டம் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் பட்டியல் வாகன துறைக்கான பி.எல்.ஐ., திட்டம் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் பட்டியல் ...
நிதிச் சந்தைகளில் பங்கேற்க அனில் அம்பானிக்கு தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2022
23:48

மும்பை,:அனில் அம்பானிக்கு, பங்குச் சந்தை உள்ளிட்ட நிதி சந்தைகளில் பங்கேற்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தடை விதித்துள்ளது.அத்துடன், ‘ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்துக்கும், அதில் உயர் பதவிகளில் உள்ள அமித் பாப்னா, ரவீந்திர சுதாகர், பிங்கேஷ் ஆர் ஷா ஆகிய மூன்று நபர்களுக்கும் இதே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கூறி, இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக, செபி தெரிவித்துள்ளது. மேலும், செபியின் 100 பக்கம் கொண்ட இடைக்கால உத்தரவில், அனில் அம்பானி உள்ளிட்ட தடை விதிக்கப்பட்டவர்கள், செபியில் பதிவு செய்துள்ள நபர்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் இயக்குநர்கள், புரமோட்டர்கள் என யாரிடமும் தொடர்புவைத்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 – 2019ம் ஆண்டில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், பல நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கியது குறித்து விரிவான விசாரணையில், செபி ஈடுபட்டு உள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், மிகவும் பலகீனமான நிதி நிலை கொண்ட நிறுவனங்கள் பலவற்றுக்கு கடன் வழங்கியதாகவும்; இதில் அனில் அம்பானியுடன் முதலில் குறிப்பிட்ட மூவரும் உடன் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த கடன் பெற்ற நிறுவனங்கள், அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்துடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள், நிதியை மடைமாற்றும் ஒரு வழியாக பயன்பட்டுள்ளன.இதில் சம்பந்தப்பட்ட 28 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வழங்கிய கடன்களின் அளவு, 2018 மார்ச் 31 ல், 900 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019 மார்ச் 31ல், 7,900 கோடியாக அதிவேகமாக அதிகரித்துள்ளது என்றும் செபி தெரிவித்துள்ளது.மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கூறி, ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளது, செபி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)