பதிவு செய்த நாள்
16 பிப்2022
22:07
புதுடில்லி:வணிகத்தில் பெரும் வெற்றியை அடைந்த சிலர், எப்போதாவது தங்களது ஆரம்பகால வாழ்க்கை நிலையை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதுண்டு.
அந்த வரிசையில் இப்போது, ‘வேதாந்தா’ குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலும் சேர்ந்துள்ளார்.இன்று, அனில் அகர்வால் உலகறிந்த ஒரு பெரும் தொழிலதிபர். ஆனால், அவர் மும்பைக்கு, கையில் ஒரு படுக்கை, ஒரு டிபன் பாக்ஸ் உடன் மட்டுமே வந்து இறங்கியவர்.
அண்மையில் டுவிட்டரில், அவர் முதன் முதலாக மும்பைக்கு வந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க மும்பைக்கு வருகின்றனர். அப்படி வந்தவர்களில் நானும் ஒருவன். கையில் ஒரு டிபன் பாக்ஸ், ஒரு படுக்கை, கண்களில் கனவு... இவற்றுடன் நான் பீஹாரிலிருந்து கிளம்பிய நாள் எனக்கு நினைவிருக்கிறது.
நான் ‘விக்டோரியா டெர்மினஸ்’ ரயில் நிலையத்திற்கு வந்தேன். அங்கே தான் முதல் முறையாக கறுப்பு – மஞ்சள் வண்ணத்திலான டாக்சி, மாடி பஸ் போன்றவற்றை பார்த்தேன். இவை எல்லாமே இதற்கு முன் நான் சினிமாவில் தான் பார்த்திருந்தேன். நான் இளைஞர்களை கடினமாக உழைக்கவும், இலக்குகளை எட்டவும் ஊக்குவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனில் அகர்வால், ‘வேதாந்தா ரிசோசர்ஸ்’ நிறுவனத்தை 1970ல் துவக்கினார். இது இப்போது லண்டனை தலைமையிடமாக கொண்ட, உலகளாவிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.இதன் வருவாய், 2021 நிலவரப்படி, கிட்டத்தட்ட 88 ஆயிரம் கோடி ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|