பதிவு செய்த நாள்
19 பிப்2022
20:05
புதுடில்லி:புதுடில்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது பெருநகரங்களில், கடந்த நான்கு மாதங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாக மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசின் முயற்சியால் சூரத், புனே, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புதுடில்லி, கோல்கட்டா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில், கடந்த நான்கு மாதங்களில், மின்சார சார்ஜிங் நிலையங்கள் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், இந்த ஒன்பது நகரங்களில் கூடுதலாக 678 பொது சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 1,640 பொது சார்ஜிங் நிலையங்களில், 940 நிலையங்கள் இந்த நகரங்களில் உள்ளன.
நாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களும், முக்கியமான நகரங்களில் 22 ஆயிரம் நிலையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|