பதிவு செய்த நாள்
22 பிப்2022
20:14
‘கியா இந்தியா’ ஏற்றுமதி
கியா இந்தியா நிறுவனம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அதன் அனந்தபூர் ஆலையின் உற்பத்தி, 5 லட்சத்தை தாண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், நான்கு லட்சம் கார்களை உள்நாட்டிலும்; ஒரு லட்சம் கார்களை வெளிநாட்டிலும் வினியோகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
‘ஜெட் ஏர்வேஸ்’ அதிகாரி
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக, ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விபுல குணதிலக நியமிக்கப்பட்டு உள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியுள்ள ‘ஜலான் கல்ராக் கூட்டமைப்பு’ இதை தெரிவித்துள்ளது.
உச்ச விலையில் கச்சா
ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் காரணமாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய் கிட்டத்தட்ட 100 அமெரிக்க டாலரை எட்டி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, முதன் முறையாக, கச்சா எண்ணெய் விலை மீண்டும் இந்த அளவுக்கு உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது.
புதிய முயற்சியில் ‘ஏர்பஸ்’
விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஏர்பஸ் நிறுவனம், விரைவில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.சூழலை மாசுபடுத்தாமல் இருப்பதற்கான இம்முயற்சியில், விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பு நிறுவனமான ‘சி.எப்.எம்., இண்டர்நேஷனல்’ உடன் கூட்டு சேர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தேவை அதிகரிக்கும்
நாட்டின் எரிபொருள் தேவை, ஏப்ரல் முதல் தேதியன்று துவங்கும் அடுத்த நிதியாண்டில், 5.5 சதவீதம் அதிகரிக்கும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு, நாட்டில் பொருளாதார வளர்ச்சி தற்போது மீட்சி பெற்று வருவதை அடுத்து, எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|