பதிவு செய்த நாள்
24 பிப்2022
00:39
புதுடில்லி:நிதி தொழில்நுட்ப நிறுவனமான ‘பாரத்பே’, அதன் துணை நிறுவனரான அஷ்னீர் குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் குரோவரை, அலுவலக நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காக நீக்கி உள்ளது.மாதுரி ஜெயின் குரோவர், அலுவலக நிதியை, தன்னுடைய அழகு பராமரிப்பு செலவுகளுக்கும் வெளிநாடுகள் செல்வதற்கும், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தியதாக குற்றஞ் சாட்டப்பட்டு, நீக்கப்பட்டுள்ளார்.
மாதுரி ஜெயின் குரோவர், நிறுவனத்தின் மனிதவள துறை மற்றும் நிதி செயல்பாடுகளை கவனித்து வந்தார். இந்நிலையில், அஷ்னீர் குரோவர், ‘கோட்டக் மகிந்திரா பேங்க்’ ஊழியருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும்; மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் மூன்று மாத விடுப்பில் சென்றார். அடுத்த சில நாட்களிலேயே அவரது மனைவி மாதுரியும் கடந்த மாதம் விடுப்பில் அனுப்பப்பட்டார்.இந்நிலையில், தற்போது மாதுரி நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.இவர்களது நிதி முறைகேடுகள் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது, பாரத்பே நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|