பதிவு செய்த நாள்
24 பிப்2022
13:37
சென்னை : ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்டு உள்ளதால் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலையும், தங்கம் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்டு உள்ளதால் உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்க தொடங்கி உள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் கடுவை சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிந்து 55,355 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 580 புள்ளிகள் சரிந்து, 16,480ஆகவும் வர்த்தகமாகிறது.
இதுதவிர கச்சா எண்ணெய் விலையும் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் விலை 100 டாலரை தாண்டியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் வரை உயரரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காலைநேர நிலவரப்படி ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.108 உயர்ந்து கிராம் ரூ.4827க்கும், சவரன் ரூ.864 உயர்ந்து, ரூ 38,616க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.70.60க்கு விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|