பதிவு செய்த நாள்
24 பிப்2022
21:50
ஆறு லட்சம் ட்ரோன்கள்
சென்னையை சேர்ந்த ‘கருடா ஏரோஸ்பேஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம், 2025ம் ஆண்டுக்குள், ஆறு லட்சம் ட்ரோன்களை தயாரிக்க இலக்கு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், இந்நிறுவனம் ‘கிஸான் ட்ரோன்’ திட்டத்தின் வாயிலாக, ஆறு லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இலக்கு நிர்ணயித்திருப்ப தாக தெரிவித்துள்ளது.
அழகு பொருட்கள் சந்தை
அழகு பொருட்கள் சந்தையில், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை பின்னுக்குத் தள்ளி, விரைவில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா மாற வாய்ப்புள்ளது என, ‘நைக்கா’ நிறுவன தலைவர் பல்குனி நாயர் தெரிவித்துள்ளார்.மேலும், அழகு பொருட்களுக்கான இந்திய சந்தை, தற்போது வேகமாக ஒழுங்குபடுத்தப்பட்டதாக மாறி வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
‘செபி’க்கு புதிய தலைவர்‘
செபி’யின் தலைவரான அஜய் தியாகியின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதால், செபி தலைவர் நியமனம் குறித்து, அரசு விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது.செபியின் அடுத்த தலைவர் பதவிக்கு, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பலர் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நுகர்பொருள் விற்பனையில் ஐ.ஓ.சி.,
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ நுகர்பொருள் விற்பனையிலும் ஈடுபட துவங்கி உள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது இந்நிறுவனம், ‘தாபர்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
‘ஏர்டெல்’ வசமான நிறுவனம்
தொலைதொடர்பு நிறுவனமான ‘பார்தி ஏர்டெல்’, ‘பிளாக்செயின்’ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘அகிலீஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.இருப்பினும், இந்நிறுவனத்தை எவ்வளவு தொகைக்கு கையகப்படுத்தி உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை பார்தி ஏர்டெல் தெரிவிக்கவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|