பதிவு செய்த நாள்
24 பிப்2022
21:46
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.83 லட்சம் கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, வருமான வரி துறை மேலும் அறிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில் இம்மாதம் 21ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம் 1.83 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டு உள்ளது. இது, வருமான வரி தாக்கல் செய்த 2.07 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதில், கடந்த 2020 – 21 நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1.67 கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 33 ஆயிரத்து 819 கோடி ரூபாயும் அடக்கம்.மேலும், நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்டிருக்கும் ரீபண்டில், 2.04 கோடி தனிநபர்களுக்கு 65 ஆயிரத்து 498 கோடி ரூபாயும்; 2.30 லட்சம் நிறுவனங்களுக்கு 1.17 லட்சம் கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|