வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரிப்பு பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரிப்பு ...
பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2022
19:37

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த பிப்ரவரி மாதத்தில் 22.36 சதவீதம் அதிகரித்து, 2.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரித்து, 2.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பொறியியல் பொருட்கள், பெட்ரோலியம், ரசாயனம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரித்ததை அடுத்து, இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளது.மேலும், இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில், இறக்குமதி 35 சதவீதம் அதிகரித்து, 4.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலியம், கச்சா எண்ணெய் ஆகியவை இறக்குமதி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.61 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்து உள்ளது.வர்த்தக பற்றாக்குறை என்பது, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே உள்ள வித்தியாசமாகும்.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஆண்டு பிப்ரவரியில், 99 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், வர்த்தக பற்றாக்குறை 13.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
தங்கத்தின் இறக்குமதி, கடந்த பிப்ரவரியில் 11.45 சதவீதமும்; எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதி 29 சதவீதமும் அதிகரித்துள்ளது.இவ்வாறு வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)