பதிவு செய்த நாள்
04 மார்2022
20:42
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஓரளவு ஏற்றம் கண்டுள்ளது.‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில் நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த பிப்ரவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 51.8 புள்ளிகளாக சிறிது உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் 51.5 புள்ளிகளாக இருந்தது. இந்த குறியீட்டை பொறுத்தவரை, 50க்கும் மேற்பட்ட புள்ளிகள், வளர்ச்சியை குறிப்பதாகும். ஆர்டர்களுக்கான முன்பதிவுகள், தேவை அதிகரித்தது மற்றும் தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் வந்தது போன்ற காரணங்களால், இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆயினும், சந்தை போட்டி அழுத்தங்கள், அதிக விலை ஆகியவற்றால் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.மேலும், உள்ளீட்டுப் பொருட்கள் தட்டுப்பாடு, மாநில தேர்தல்கள் ஆகியவையும் வளர்ச்சிக்கு தடையாக இருந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு மிக மெதுவான வளர்ச்சி பிப்ரவரியில் காணப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|