பதிவு செய்த நாள்
04 மார்2022
20:43
புதுடில்லி:இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என, லண்டனை சேர்ந்த ஆலோசனை நிறுவனமான ‘குளோபல் டேட்டா’ தெரிவித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல் காரணமாக, வளர்ச்சி குறித்த இதற்கு முந்தைய கணிப்பை விட, தற்போது குறைத்து அறிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் _ ரஷ்யா போர் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதியில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், உள்ளீட்டு விலை அதிகரித்து வருகிறது. அத்துடன் நுகர்பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனையடுத்து, இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, முந்தைய கணிப்பிலிருந்து 0.1 சதவீதம் குறைத்து, 7.8 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கிறோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
நாட்டின் இறக்குமதியை பொறுத்தவரை, உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பங்கு, மொத்த இறக்குமதியில் 2.2 சதவீதமாகும். இது, கடந்த 2020ம் ஆண்டு நிலையாகும்.உக்ரைன் போர் காரணமாக, நாட்டின் பணவீக்க விகிதம், நடப்பு ஆண்டில் 5.5 சதவீதமாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, கடந்த 2021ல் 5.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|