பதிவு செய்த நாள்
04 மார்2022
20:47
புதுடில்லி:நாட்டின் முன்னணி பங்குச் சந்தையான என்.எஸ்.இ., எனும், தேசிய பங்குச் சந்தை, அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவிக்காக, தகுதி வாய்ந்த நபரை தேடும் பணியை துவக்கி உள்ளது.
தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் லிமாயே பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைவதை அடுத்து, புதிய நபரை தேடும் பணி துவங்கி உள்ளது.தேசிய பங்குச் சந்தை, புதிய பங்கு வெளியீட்டில் அனுபவம் மிக்க உயர் பொறுப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.
விக்ரம் லிமாயேவின் பதவிக் காலத்தை மீண்டும் நீட்டிப்பதற்கு வாய்ப்பிருப்பினும், அவர் பதவியில் நீடிக்க, செபியின் விதிமுறைகளின் படி, மற்றவர்களுடன் போட்டி போட வேண்டியதிருக்கும்.விக்ரம் லிமாயே, கடந்த 2017 ஜூலையில் பதவி ஏற்றார்.
இவருக்கு முன்பு இப்பதவியை வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா, பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக வெளியேற்றப்பட்டார்.தேசிய பங்கு சந்தை, விரைவில் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளதால், புதிய பங்கு வெளியீடுகளில் திறமையும், அனுபவமும் வாய்ந்தவர்களை நியமிக்க விரும்புகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|