பதிவு செய்த நாள்
04 மார்2022
20:50
இதுவும் ஒரு கலை
பணவியல் கொள்கை என்பது,
எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பதற்கான ஒரு கலை என, ரிசர்வ் வங்கியின் கவர்னர்
சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.மேலும், புவிசார் அரசியல் காரணங்களால்
பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், இத்தகைய நிலையில், பயனுள்ள தகவல்
தொடர்பு உத்திகள் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எகிறியது உருக்கு விலை
இந்தியாவில், டி.எம்.டி., கம்பி உள்ளிட்ட உருக்கு பொருட்களின் விலை, ஒரு டன்னுக்கு, 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.போர் காரணமாக, உருக்கு வினியோகத்தில் தடைகள் ஏற்பட்டிருப்பதை அடுத்து, கடந்த சில தினங்களில் விலை அதிகரித்துள்ளது. விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸ்: புதிய அதிகாரி நியமனம்
‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, சஞ்சீவ் குமார் நியமிக்கப் பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இவர், தற்போது ‘ஓபராய் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ்’ நிறுவனத்தில் தலைவராக உள்ளார். இதற்கு முன், ‘ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், டாடா விஸ்தாரா’ போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தின் முதலீடு
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், சென்னையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, அமெரிக்காவை சேர்ந்த ‘சான்மினா எஸ்.சி.ஐ., இந்தியா’ நிறுவனத்தில், கிட்டத்தட்ட 1,670 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.இந்த முதலீடு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் 5ஜி திட்டங்களை செயல்படுத்த, மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரு லட்சமாவது கார்
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யு., சென்னையில் உள்ள அதன் ஆலையிலிருந்து, ஒரு லட்சமாவது காரை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆலை, கடந்த 2007ம் ஆண்டு மார்ச்சில் துவங்கப்பட்டது. இங்கு 13 வகையான மாடல் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|