பதிவு செய்த நாள்
06 மார்2022
18:55
பெருந்தொற்று சூழலுக்கு மத்தியில் ஐந்தில் ஒரு பெண்கள் முதல் முறையாக முதலீடு செய்யத் துவங்கியிருப்பதாகவும், இவர்கள் மத்தியில் ‘மியூச்சுவல் பண்ட்’ பிரபலமான முதலீடு வாய்ப்பாக திகழ்வதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘டிஜிட்டல்’ நிதிச் சேவை நிறுவனமான ‘ஸ்கிரிப்பாக்ஸ்’ நடத்திய ஆய்வில் பங்கேற்ற பெண்களில், 70 சதவீதம் பேர் தாங்களே சுதந்திரமான பணத்தை நிர்வகிப்பதாகவும் அல்லது கணவருடன் இணைந்து நிதி விஷயங்களை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர். நிதி விஷயங்களை தெரிந்து கொள்ள மற்றும் திட்டமிடலை மேற்கொள்ள, டிஜிட்டல் வழிகளை நாடுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
பெண்களில் பெரும்பாலானோர் நீண்ட கால நிதி இலக்குகளை முதன்மையாக கொண்டு உள்ளனர். ஓய்வு காலத்திற்கான சேமிப்பு மற்றும் பிள்ளைகள் கல்விக்கான சேமிப்பு ஆகியவை முக்கிய நிதி இலக்குகளாக அமைந்துள்ளன.இளம் வயது பெண்கள் அதிக பணம் சம்பாதிப்பதை அடுத்த இலக்காக கொண்டுள்ள நிலையில், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அவசர கால நிதியை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிதி விஷயங்களில் பெண்கள் விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|