பதிவு செய்த நாள்
10 மார்2022
00:38
புதுடில்லி:சர்வதேச பயணியர் விமான சேவைக்கான தடையை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, விமான சேவையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களின் பங்குகள் விலை, நேற்று ஏற்றம் கண்டன.
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, 2020 மார்ச் 23 முதல் சர்வதேச பயணியர் விமான சேவை தடை செய்யப்பட்டது.இந்நிலையில், வழக்கமான சர்வதேச பயணியர் விமான சேவை, வரும் 27ம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என, விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தையில் ‘ஸ்பைஸ் ஜெட், இண்டர்குளோப் ஏவியேஷன்’ ஆகிய நிறுவன பங்குகளின் விலை, 8 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் விலை, மும்பை பங்கு சந்தையில் 4.90 சதவீதம் அதிகரித்து, விலை 59.90 ரூபாயாக உயர்வை கண்டது.இதேபோல், ‘இண்டி கோ’ விமான சேவையை வழங்கி வரும் இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவன பங்குகளின் விலை, 7.27 சதவீதம் அதிகரித்து 1,715 ரூபாயாக ஏற்றம் கண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|