பதிவு செய்த நாள்
12 மார்2022
20:13
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வருமான வரி துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, மார்ச் 7ம் தேதி வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டு உள்ளது.இந்த தொகை, வருமான வரி தாக்கல் செய்திருந்த 2.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 – 21ம் ஆண்டுக்காக வருமான வரி தாக்கல் செய்திருந்த 1.74 கோடி பேருக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரத்து, 297 கோடி ரூபாயும் இதில் அடக்கம்.நடப்பு நிதியாண்டில், மொத்தம் 2.12 கோடி தனிநபர்களுக்கு, ரீபண்டாக 67 ஆயிரத்து 442 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.மேலும், 2.31 லட்சம் நிறுவனங்களுக்கு 1.19 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|