பதிவு செய்த நாள்
12 மார்2022
20:20
மும்பை:அமெரிக்காவை சேர்ந்த ‘வால்மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் நேரடியாக ஸ்டோர்களை அமைத்து, வணிகத்தில் ஈடுபட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், ‘பிளிப்கார்ட், போன்பே’ ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதால் அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டக் மெக்மில்லன் கூறியதாவது:
இந்தியாவில் வால்மார்ட் ஸ்டோர்களை அமைத்து, நேரடியாக வணிகத்தில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை. இப்போதைக்கு நாங்கள் பிளிப்கார்ட், போன்பே ஆகிய நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துகிறோம்.
பிளிப்கார்ட் முதலீடுகள் குறித்து வால்மார்ட் மிகவும் திருப்தியாக உள்ளது.பிளிப்கார்ட் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது என்பது எங்களது இறுதி இலக்கு. ஆனால், நாங்கள் இப்போது வலுவான அடிப்படையை கட்டியமைக்க விரும்புகிறோம். புதிய பங்கு வெளியீட்டுக்கு வர ரெடியான பின், அது குறித்து அதன் குழு முடிவெடுக்கும்.
தற்போது பிளிப்கார்ட், போன்பே நிறுவனங்களுக்கு தேவையான நிதிஆதாரங்களை வழங்குவதுதான் வால்மார்ட்டின் வேலையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|