இந்தியாவில் ஸ்டோர்கள் அமைக்க ‘வால்மார்ட்’ விரும்பவில்லை இந்தியாவில் ஸ்டோர்கள் அமைக்க ‘வால்மார்ட்’ விரும்பவில்லை ... தங்கம் விலை  25 சதவீதம் உயரும் தங்கம் விலை 25 சதவீதம் உயரும் ...
அடையாள திருட்டு மோசடியை தடுக்கும் வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2022
20:56

'பான் கார்டு' போன்ற விபரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படும் மோசடி அதிகரித்து வருவதால், இது தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகிறது.


'டிஜிட்டல்' யுகத்தில் 'பில்' செலுத்துவது, பொருட்களை வாங்குவது போன்ற தேவைகளை இணையம் மூலமே எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. நிதிச் சேவைகளையும் விரல் நுனியில் பெற முடிகிறது. டிஜிட்டல் வசதி எளிதாகி இருக்கும் அதே நேரத்தில், சைபர் தாக்குதல் மற்றும் இணைய மோசடிகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், அடையாள திருட்டு சார்ந்த மோசடிகளும் இணையத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருவருடைய பெயர் உள்ளிட்ட விபரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது அடையாள திருட்டு என கொள்ளப்படுகிறது.


கடன் மோசடி


ஒருவருடைய தனிப்பட்ட விபரங்கள் மற்றும் நிதி விபரங்களை முறைகேடாக பயன்படுத்தப் படுவது கிரிமினல் குற்றமாகும். அடையாள திருட்டு பலவிதங்களில் நடைபெறலாம். ஒருவருடைய பான் கார்டு விபரத்தை முறைகேடாக பயன்படுத்துவது இவற்றில் ஒன்றாக அமைகிறது. வங்கிக் கடன் பெறுவது போன்றவற்றுக்கு பான் கார்டு எண் அவசியம் என்பதால், மோசடி ஆசாமிகள், பான் கார்டு விபரத்தை திருடி சமர்ப்பித்து கடன் பெறுவதும் நடைபெற்று வருகிறது.


அண்மையில், நிதி சேவை செயலி நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்கள் பலரது பான் கார்டு விபரம் இப்படி முறைகேடாக கடன் பெற பயன்படுத்தப்பட்டது தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.இந்த மோசடிக்கு இலக்கானவர்கள் தங்கள் பான் கார்டு எண் கொண்டு தங்களுக்கு தெரியாமலே கடன் பெறப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


எனவே, அடையாள திருட்டு மோசடி தொடர்பான விழிப்புணர்வு பெறுவது அவசியமாகிறது. அதை விட முக்கியமாக, பான் கார்டு விபரம் மற்றவர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் கண்காணிப்பது அவசியம். 'கிரெடிட் ஸ்கோர்' அறிக்கையை பரிசீலிப்பதன் மூலம் பான் கார்டு பயன்பாடு தொடர்பான தகவலை அறியலாம்.


கிரெடிட் ஸ்கோர்


கிரெடிட் ஸ்கோர் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கையில், தொடர்புடைய பான் கார்டு மூலம் பெறப்பட்டிருக்கும் கடன் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். கிரெடிட் ஸ்கோர் வழங்கும் நிறுவனங்கள் இணையதளத்தில், பெயர், பிறந்த தேதி, பான் கார்டு விபரத்தை சமர்ப்பித்து, இந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒருவர் தன்னுடைய பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.


இவ்வாறு அடிக்கடி கிரெடிட் ஸ்கோர் அறிக்கையை சரி பார்ப்பது அவசியம். சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கைகள் ஏதேனும் தெரிந்தால், உடனே இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும்.பான் கார்டு முறைகேடாக பயன்படுத்தப்படுவது ஒருவரது கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். எனவே, இது தொடர்பாக தகவல் அளித்து திருத்தம் மேற்கொள்வதும் முக்கியம்.


இது தவிர, பான் கார்டு விபரத்தை பாதுகாப்பாக பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பான் கார்டு விபரத்தை தேவையில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது. பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற விபரங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பான் கார்டு நகலை கொடுத்தால், எதற்காக அதை கொடுக்கிறோம் என்பதை தெளிவாக
எழுதிக் கொடுப்பதும் தவறான பயன்பாட்டை தவிர்க்க உதவும். இணைய சேவைகளை
பயன்படுத்தும் போது, அந்த தளங்கள் நம்பகமானவை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)