பதிவு செய்த நாள்
13 மார்2022
20:56
'பான் கார்டு' போன்ற விபரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படும் மோசடி அதிகரித்து வருவதால், இது தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகிறது.
'டிஜிட்டல்' யுகத்தில் 'பில்' செலுத்துவது, பொருட்களை வாங்குவது போன்ற தேவைகளை இணையம் மூலமே எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. நிதிச் சேவைகளையும் விரல் நுனியில் பெற முடிகிறது. டிஜிட்டல் வசதி எளிதாகி இருக்கும் அதே நேரத்தில், சைபர் தாக்குதல் மற்றும் இணைய மோசடிகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், அடையாள திருட்டு சார்ந்த மோசடிகளும் இணையத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருவருடைய பெயர் உள்ளிட்ட விபரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது அடையாள திருட்டு என கொள்ளப்படுகிறது.
கடன் மோசடி
ஒருவருடைய தனிப்பட்ட விபரங்கள் மற்றும் நிதி விபரங்களை முறைகேடாக பயன்படுத்தப் படுவது கிரிமினல் குற்றமாகும். அடையாள திருட்டு பலவிதங்களில் நடைபெறலாம். ஒருவருடைய பான் கார்டு விபரத்தை முறைகேடாக பயன்படுத்துவது இவற்றில் ஒன்றாக அமைகிறது. வங்கிக் கடன் பெறுவது போன்றவற்றுக்கு பான் கார்டு எண் அவசியம் என்பதால், மோசடி ஆசாமிகள், பான் கார்டு விபரத்தை திருடி சமர்ப்பித்து கடன் பெறுவதும் நடைபெற்று வருகிறது.
அண்மையில், நிதி சேவை செயலி நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்கள் பலரது பான் கார்டு விபரம் இப்படி முறைகேடாக கடன் பெற பயன்படுத்தப்பட்டது தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.இந்த மோசடிக்கு இலக்கானவர்கள் தங்கள் பான் கார்டு எண் கொண்டு தங்களுக்கு தெரியாமலே கடன் பெறப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே, அடையாள திருட்டு மோசடி தொடர்பான விழிப்புணர்வு பெறுவது அவசியமாகிறது. அதை விட முக்கியமாக, பான் கார்டு விபரம் மற்றவர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் கண்காணிப்பது அவசியம். 'கிரெடிட் ஸ்கோர்' அறிக்கையை பரிசீலிப்பதன் மூலம் பான் கார்டு பயன்பாடு தொடர்பான தகவலை அறியலாம்.
கிரெடிட் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோர் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கையில், தொடர்புடைய பான் கார்டு மூலம் பெறப்பட்டிருக்கும் கடன் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். கிரெடிட் ஸ்கோர் வழங்கும் நிறுவனங்கள் இணையதளத்தில், பெயர், பிறந்த தேதி, பான் கார்டு விபரத்தை சமர்ப்பித்து, இந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒருவர் தன்னுடைய பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
பான் கார்டு விபரத்தை தேவையில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது. பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற விபரங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பான் கார்டு நகலை கொடுத்தால், எதற்காக அதை கொடுக்கிறோம் என்பதை தெளிவாக
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|