பதிவு செய்த நாள்
15 மார்2022
00:49
புதுடில்லி : கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.07 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட தாண்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கத்தை 2 – 6 சதவீதத்துக்குள் பராமரிக்க இலக்கு வைத்திருக்கிறது.இந்நிலையில், பிப்ரவரி மாத பணவீக்கம் இலக்கை தாண்டி 6.07 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 5.03 சதவீதமாகவும்; ஜனவரியில் 6.01 சதவீதமாகவும் இருந்தது.
சில்லரை விலை பணவீக்க உயர்வுக்கு, உணவு பொருட்களின் விலை அதிகரித்தது ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மொத்தவிலை பணவீக்கம்கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 13.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, தொடர்ந்து 11 மாதங்களாக, மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது.
மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பதற்கு, கச்சா எண்ணெய், உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்தது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|