பதிவு செய்த நாள்
15 மார்2022
20:08
தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான என்பிஎப்சி நிறுவனமான, ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் 10 புதிய கிளைகளைத் திறந்து மாநிலத்தில் தங்களது தளத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக தென்னிந்தியாவிலும் ஜிசிசி நாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனமாக ஐசிஎல் பின்கார்ப் திகழ்கிறது. 250 கிளைகளுக்கு மேல் கொண்டு செயல்பட்டு வரும் ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் மக்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு சேவைகளை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகிறது. மிகக் குறைந்த வட்டி விகிதம், தங்கத்திற்கு அதிக மதிப்பு, விரைவான பிராசஸிங் என்று இவற்றுக்காக தொடர்ந்து புகழ் பெற்ற நிறுவனமாக ஐசிஎல் பின்கார்ப் வழங்கி வருகிறது.
கோல்டு லோன், ஹயர் பர்சேஸ் லோன், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல், அந்நியச்செலாவணி, வியாபாரக் கடன், டிபென்சர்கள், முதலீட்டுத் திட்டங்கள், உடல் நலக் காப்பீட்டுத் திட்டங்கள், ஆயுள் காப்பீடு போன்ற பல சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
தற்போது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஐசிஎல் நிறுவனத்தின் 10 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஐசிஎல் பின்கார்ப்பின் சிஎம்டி, அட்வகேட். கே.ஜி. அனில்குமார் புதிய கிளைகளைத் திறந்து வைத்தார். இவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டில் 52 கிளைகளுடன் செயல்பட்டு ஐசிஎல் பின்கார்ப் பல சேவைகளை வழங்கி வருகிறது. ஆர்பிஐ விதிமுறைகளுக்குஉட்பட்டு, ஐசிஎல் பின்கார்ப் மிகச் சிறப்பான, புதுமையான சேவைகள்மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் தொடர் ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் பல கிளைகளுடன் செயல்பட்டு இந்தியா முழுவதிலும் தனது சேவைகளை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய என்பிஎஃப்சி நிறுவனமாக வெற்றி நடை போட்டு வருகிறது என ஐபிஎல் ஃபின்கார்ப் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|