இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்டி #பின்பாய் பிரச்சாரம்இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்டி #பின்பாய் பிரச்சாரம் ...  பொருளாதார பாதிப்புகள் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை பொருளாதார பாதிப்புகள் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை ...
தமிழகத்தில் தளத்தை விரிவுபடுத்தும் ஐசிஎல் பின்கார்ப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2022
20:08

தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான என்பிஎப்சி நிறுவனமான, ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் 10 புதிய கிளைகளைத் திறந்து மாநிலத்தில் தங்களது தளத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக தென்னிந்தியாவிலும் ஜிசிசி நாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனமாக ஐசிஎல் பின்கார்ப் திகழ்கிறது. 250 கிளைகளுக்கு மேல் கொண்டு செயல்பட்டு வரும் ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் மக்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு சேவைகளை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகிறது. மிகக் குறைந்த வட்டி விகிதம், தங்கத்திற்கு அதிக மதிப்பு, விரைவான பிராசஸிங் என்று இவற்றுக்காக தொடர்ந்து புகழ் பெற்ற நிறுவனமாக ஐசிஎல் பின்கார்ப் வழங்கி வருகிறது.

கோல்டு லோன், ஹயர் பர்சேஸ் லோன், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல், அந்நியச்செலாவணி, வியாபாரக் கடன், டிபென்சர்கள், முதலீட்டுத் திட்டங்கள், உடல் நலக் காப்பீட்டுத் திட்டங்கள், ஆயுள் காப்பீடு போன்ற பல சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஐசிஎல் நிறுவனத்தின் 10 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஐசிஎல் பின்கார்ப்பின் சிஎம்டி, அட்வகேட். கே.ஜி. அனில்குமார் புதிய கிளைகளைத் திறந்து வைத்தார். இவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டில் 52 கிளைகளுடன் செயல்பட்டு ஐசிஎல் பின்கார்ப் பல சேவைகளை வழங்கி வருகிறது. ஆர்பிஐ விதிமுறைகளுக்குஉட்பட்டு, ஐசிஎல் பின்கார்ப் மிகச் சிறப்பான, புதுமையான சேவைகள்மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் தொடர் ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் பல கிளைகளுடன் செயல்பட்டு இந்தியா முழுவதிலும் தனது சேவைகளை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய என்பிஎஃப்சி நிறுவனமாக வெற்றி நடை போட்டு வருகிறது என ஐபிஎல் ஃபின்கார்ப் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)