பதிவு செய்த நாள்
15 மார்2022
22:02
மும்பை:உக்ரைன் _ ரஷ்யா போர் காரணமாக, இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை, எஸ்.பி.ஐ., வெளியிட்டு உள்ளது.அதில் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைன் மீதான போர் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு, ஜூன் மாதத்தில் 77.5 ரூபாயாக சரிவைக் காணும். இருப்பினும், டிசம்பரில் 77 ரூபாய் எனும் அளவுக்கு, ஓரளவு மீட்சி காணும்.அடுத்த நிதியாண்டில், சராசரி கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 100 டாலராக இருந்தால், பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக குறையும். இதற்கு முன் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
மேலும், பணவீக்கம் 5 சதவீதமாக உயரும். அத்துடன் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருக்கும்.கச்சா எண்ணெய் சராசரி விலை 130 டாலராக அதிகரிக்கும் பட்சத்தில், பணவீக்கம் 5.7 சதவீதமாகவும்; வளர்ச்சி 7.1 சதவீதமாகவும்; நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5 சதவீதமாகவும் அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|