பதிவு செய்த நாள்
15 மார்2022
22:07
புதுடில்லி:வாகன துறைக்கான, பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், 75 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் துறைக்கான, உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற, 75 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.\
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில், ‘மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோகார்ப், லுகாஸ் டி.வி.எஸ்., டாடா கும்மின்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ்’ ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.இந்த பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில், 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, இலக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதைவிட அதிகமாக, 74 ஆயிரத்து 850 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, இத்திட்டம் துவக்கத்திலேயே வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவிலுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி; ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், கொரியா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும், தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் கீழ், நவீன வாகன தொழில்நுட்பத்தின் கீழ், தயாரிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, 18 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|