பதிவு செய்த நாள்
21 மார்2022
22:21
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு, புதிய ஆவணங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட வரைவை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான நடைமுறைகளை, தீவிரமாக எல்.ஐ.சி., மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, செபிக்கு, ஏற்கனவே வரைவு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தற்போது, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவு அறிக்கைகளையும் இணைத்து, மேம்படுத்தப்பட்ட வரைவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி., கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, செபிக்கு விண்ணப்பித்தது.அப்போது, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த, இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.இப்போது, மூன்றாவது காலாண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த மூன்றாவது காலாண்டில், நிறுவனம், 235 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் 78 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பங்கு விலக்கல் நடவடிக்கையில் ஈடுபட இலக்கை வைத்துள்ளது. இதை எட்டும் வகையில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள், அதாவது, 31.6 கோடி பங்குகளை, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மார்ச் மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கவும், சந்தை சூழலே மாறிவிட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|