சீனாவில் தொற்று பரவல் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு சீனாவில் தொற்று பரவல் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு ...  கைவிட்டார் முகேஷ் அம்பானி; கைப்பற்றுகிறார் ்வுதம் அதானி கைவிட்டார் முகேஷ் அம்பானி; கைப்பற்றுகிறார் ்வுதம் அதானி ...
எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்காக புதிய ஆவணங்கள் தாக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2022
22:21

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு, புதிய ஆவணங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட வரைவை தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான நடைமுறைகளை, தீவிரமாக எல்.ஐ.சி., மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, செபிக்கு, ஏற்கனவே வரைவு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தற்போது, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவு அறிக்கைகளையும் இணைத்து, மேம்படுத்தப்பட்ட வரைவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி., கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, செபிக்கு விண்ணப்பித்தது.அப்போது, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த, இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.இப்போது, மூன்றாவது காலாண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த மூன்றாவது காலாண்டில், நிறுவனம், 235 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் 78 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பங்கு விலக்கல் நடவடிக்கையில் ஈடுபட இலக்கை வைத்துள்ளது. இதை எட்டும் வகையில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள், அதாவது, 31.6 கோடி பங்குகளை, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மார்ச் மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கவும், சந்தை சூழலே மாறிவிட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)