எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்காக  புதிய ஆவணங்கள் தாக்கல் எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்காக புதிய ஆவணங்கள் தாக்கல் ...  பறக்கிறது பறக்கிறது ...
கைவிட்டார் முகேஷ் அம்பானி; கைப்பற்றுகிறார் ்வுதம் அதானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2022
22:25

புதுடில்லி:‘சவுதி அராம்கோ’ நிறுவனத்துடன் சேர்ந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து, அந்நிறுவனத்துடன், ‘அதானி குழுமம்’ முதற்கட்ட பேச்சு நடத்தி உள்ளது.


சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம், சவுதி அராம்கோ. இந்நிறுவனத்துடன் இணைந்து, முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சை, கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில் சவுதி அரோமா 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்பியது. இது குறித்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பேச்சு நடைபெற்றன. ஆனால் பங்குகளை மதிப்பிடுவதில் சிக்கல் இருந்ததால், இம்முயற்சி நிறைவேறவில்லை.

கடந்த நவம்பரில், இது குறித்த பேச்சு நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆயினும், இந்தியாவில் முதலீட்டை மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் சவுதி அராம்கோ அறிவித்தது.ரிலையன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, பசுமை எரிசக்தி துறையில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டது. இந்நிலையில், ரிலையன்ஸ் விட்டதை, அதானி பிடிக்க முயற்சிக்கிறது. சவுதி அராம்கோ உடன் இணைந்து, முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சியில், அதானி குழுமம் இறங்கி உள்ளது.

கடந்த ஜனவரியில், அதானி குழுமம், தென் கொரியாவை சேர்ந்த ‘போஸ்கோ’ நிறுவனத்துடன் சேர்ந்து, பசுமை உருக்கு ஆலையை, குஜராத்தில் அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்தது.தற்போது, சவுதி அராம்கோ உடன் இணைந்து, முதலீடுகளை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், இம்முயற்சிகள் குறித்து, இவ்விரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)