பதிவு செய்த நாள்
21 மார்2022
22:25
புதுடில்லி:‘சவுதி அராம்கோ’ நிறுவனத்துடன் சேர்ந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து, அந்நிறுவனத்துடன், ‘அதானி குழுமம்’ முதற்கட்ட பேச்சு நடத்தி உள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம், சவுதி அராம்கோ. இந்நிறுவனத்துடன் இணைந்து, முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சை, கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில் சவுதி அரோமா 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்பியது. இது குறித்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பேச்சு நடைபெற்றன. ஆனால் பங்குகளை மதிப்பிடுவதில் சிக்கல் இருந்ததால், இம்முயற்சி நிறைவேறவில்லை.
கடந்த நவம்பரில், இது குறித்த பேச்சு நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆயினும், இந்தியாவில் முதலீட்டை மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் சவுதி அராம்கோ அறிவித்தது.ரிலையன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, பசுமை எரிசக்தி துறையில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டது. இந்நிலையில், ரிலையன்ஸ் விட்டதை, அதானி பிடிக்க முயற்சிக்கிறது. சவுதி அராம்கோ உடன் இணைந்து, முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சியில், அதானி குழுமம் இறங்கி உள்ளது.
கடந்த ஜனவரியில், அதானி குழுமம், தென் கொரியாவை சேர்ந்த ‘போஸ்கோ’ நிறுவனத்துடன் சேர்ந்து, பசுமை உருக்கு ஆலையை, குஜராத்தில் அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்தது.தற்போது, சவுதி அராம்கோ உடன் இணைந்து, முதலீடுகளை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், இம்முயற்சிகள் குறித்து, இவ்விரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|