பதிவு செய்த நாள்
24 மார்2022
20:41
புதுடில்லி:வேதியியல் பேட்டரி செல் சேமிப்பு துறைக்கான பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் பயனை பெறுவதற்கு, நான்கு நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக, மத்திய கனரக அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு, உள்நாட்டில் தயாரிப்பை ஊக்குவிக்கவும்; இறக்கு மதியை குறைப்பதற்கும், பி.எல்.ஐ., எனும் திட்டத்தை துறைவாரியாக அறிமுகம் செய்து வருகிறது.அந்த வகையில், உள்நாட்டில் பேட்டரி செல் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், 18 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, பி.எல்.ஐ., திட்டத்தை அறிமுகம் செய்தது.
தற்போது, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில், நான்கு நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய கனரக அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி, ரிலையன்ஸ் நியு எனர்ஜி’ ஆகிய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|