பதிவு செய்த நாள்
24 மார்2022
20:36
சென்னை:சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்படும், ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையத்தில், வணிக வசதிகளுக்காக, இரண்டு லட்சம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம், 25.40 லட்சம் சதுர அடியில் கட்டப்படும் இந்த புதிய முனையம் வாயிலாக, ஓர் ஆண்டுக்கு கையாளப்படும் பயணியரின் எண்ணிக்கை, 1.7 கோடியிலிருந்து, 3.5 கோடியாக உயர்த்தப்படும்.மொத்தம், ஐந்து தளங்கள் கொண்ட இந்த முனையத்தில், வணிக வசதிகளுக்காக, சில லட்சம் சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு தளத்திலும், உணவுக் கூடங்கள், சிற்றுண்டி கடைகள், சில்லரை விற்பனை கடைகள், வரி இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அலுவலகங்கள், ஏ.டி.எம்., மையங்கள், வெளிநாட்டு பணம் மாற்றும் மையம் என, வர்த்தக ரீதியிலான வசதிகளுக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மொத்தம் 2 லட்சம் சதுர அடி இட ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இது, முனையத்தின் மொத்த பரப்பளவில், 8.5 சதவீதமாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|