பதிவு செய்த நாள்
25 மார்2022
22:22
புதுடில்லி:‘நிடி ஆயோக்’கின், கடந்த 2021ம் ஆண்டுக்கான, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, குஜராத் மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மாநிலங்களின் ஏற்றுமதி திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அவற்றின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது, நிடி ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு. 36 சதவீதம்கடந்த 2021ம் ஆண்டுக்கான குறியீட்டில், குஜராத் மாநிலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த இடங்களை மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயா, லட்சத்தீவுகள், லடாக் போன்றவை, கடைசி இடங்களில் உள்ளன.
இது குறித்து, நிடி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது:உலக நாடுகளின் வர்த்தக வளர்ச்சி 30 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவின் வர்த்தக வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது.ஏற்றுமதி திட்டங்கள்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீத பங்கு, மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்ததாக உள்ளது.
சில மாநிலங்கள் இன்னும் நன்றாக செயல்பட முடியும்.ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, மாநிலங்கள், மாவட்ட அளவிலான ஏற்றுமதித் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு குழுக்களைக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|