பதிவு செய்த நாள்
30 மார்2022
20:41
புதுடில்லி:இந்திய பொருளாதாரத்தில், ரஷ்யா – உக்ரைன் போரினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை இப்போதே கணிக்க முடியாது என, பிரபல பொருளாதார அறிஞர் பினாகி சக்ரவர்த்தி கூறியுள்ளார். அதேசமயம், இந்த போரினால், உலகளவிலான பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகின் பல நாடுகளில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துஉள்ளது. அத்துடன், வினியோக சங்கிலி தொடரில் தடைகளும், நிதி சந்தைகளில் அதிக ஏற்ற – இறக்கங்களும் ஏற்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டெழுந்த நிலையில், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் அதன் பாதிப்புகள் குறித்து இப்போதே கணித்துவிட முடியாது.இந்தியாவின் பொருளாதார நிலை முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறது. ஆனாலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|