பதிவு செய்த நாள்
31 மார்2022
20:01
புதுடில்லி:தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜனவரியில் சிறிது சரிவைக் கண்டிருப்பதாக, ‘டிராய்’ எனும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னணி
இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜனவரியில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சற்று சரிவு கண்டு, 116.94 கோடியாக குறைந்துஉள்ளது. கடந்த டிசம்பரில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117.84 கோடியாக இருந்தது.ஜனவரியில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம், ‘ரிலையன்ஸ் ஜியோ’ 93.22 லட்சம் மொபைல் போன் பயனர்களை இழந்தது தான்.
‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம் மட்டுமே, இம்மாதத்தில் 7.14 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றுஉள்ளது.‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் 3.89 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துஉள்ளது. ஒயருடன் கூடிய இணைப்பில், அதிக வாடிக்கையாளர்களுடன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் உள்ளது.
78.34 கோடி
இப்பிரிவில், இந்நிறுவனம் 3.08 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது. பிராட்பேண்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், ஜனவரியில் 1.1 சதவீத சரிவைக் கண்டு உள்ளது. ஜனவரியில், பிராட்பேண்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 78.34 கோடியாக குறைந்து உள்ளது.இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|