பதிவு செய்த நாள்
04 ஏப்2022
12:09
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளில் அதிக ஏற்றம் கண்டு வர்த்தகமாகின. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 18 ஆயிரம் புள்ளிகளையும் கடந்து வர்த்தகமாகின. தங்கம் விலை சவரன் ரூ.176 சரிந்தது.
வர்த்தகவாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1143.78 புள்ளிகள் உயர்ந்து 60,420.47ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 302.20 புள்ளிகள் உயர்ந்து 17,972.65ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து நிப்டி சற்று நேரத்தில் 18 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், முன்னணி நிறுவன பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டதன் எதிரொலி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டன.
தங்கம் விலை சரிவு
தங்கம் விலையை பொருத்தமட்டில் இன்று சரிவை சந்தித்தது. சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி ஒரு கிராமின் விலை ரூ.22 குறைந்து, ரூ.4,803க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ரூ.176 குறைந்து, ரூ.38,424க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.71.40க்கு விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|