பதிவு செய்த நாள்
06 ஏப்2022
20:30
புதுடில்லி:கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் நாட்டின் வர்த்தகப்பற்றாக்குறை, 87.5 சதவீதம் அதிகரித்து, 14 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, 2020 – 21ம் நிதியாண்டில், 7 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிப்பதை வர்த்தகப் பற்றாக்குறை என்கிறோம். கடந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி சாதனை அளவாக, 31 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இதே காலத்தில் இறக்குமதியும், 45 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையடுத்து வர்த்தகப் பற்றாக்குறை, 14 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த மார்ச்சில் ஏற்றுமதி முதன் முறையாக 3 லட்சம் கோடியை தாண்டி, 3 லட்சத்து 2,850 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில் பெட்ரோலியப் பொருட்கள் சாராத ஏற்றுமதி, 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|