பதிவு செய்த நாள்
06 ஏப்2022
20:39
புதுடில்லி:கடந்த 11 ஆண்டுகளில் மூலப்பொருட்கள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள போதிலும், சென்ற மார்ச் மாதத்தில் சேவைகள் துறை சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.
இது குறித்து,‘எஸ் அண்டு பி குளோபல் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 2021 டிசம்பர் முதல், சேவைகள் துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. கடந்த மார்ச்சில் சேவைகள் துறையின் வளர்ச்சி குறியீடு, 53.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இது, பிப்ரவரியில் 51.8 புள்ளிகளாக இருந்தது. சேவைகள் துறை தொடர்ந்து எட்டு மாதங்களாக வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை, 11 ஆண்டுகள் காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இருந்தபோதிலும் சேவைகள் துறையில் பாதிப்பில்லை.பல நிறுவனங்கள் மூலப்பொருட்கள் விலை உயர்வில் சிறிதளவை மட்டுமே நுகர்வோர் மீது சுமத்தியுள்ளன. இதனால், கடந்த மார்ச் மாதத்தில் சேவைகள் மற்றும் தயாரிப்பு துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறியீடு 54.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இது, பிப்ரவரியில் 53.5 புள்ளிகளாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சேவைகள் துறையில் தகவல் தொழில்நுட்பம், வங்கி, நிதி, காப்பீடு, ஹோட்டல், தொலை தொடர்பு உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|