பதிவு செய்த நாள்
07 ஏப்2022
20:55
சர்ச்சை நாயகன் எலான்
எலான் மஸ்க், டுவிட்டரின் பங்குகளை வாங்கி, அதன் பங்குதாரர் ஆகியிருக்கும் நிலையில், டுவிட்டர் ஊழியர்களில் சிலர், கவலையில் ஆழந்துள்ளனர். அதிகம் பங்குகளை வாங்கி, இயக்குனராகவும் ஆகிவிட்ட எலான், நிறுவனத்தை அதன் மிதமான போக்கிலிருந்து விலகி, சர்ச்சைக்குரிய ஒன்றாக்கி விடுவாரோ என்ற அச்சம் ஊழியர்களில் சிலருக்கு எழுந்துள்ளது.
சாதனை உற்பத்தியில் என்.எல்.சி.,
‘என்.எல்.சி., இந்தியா’ நிறுவனம், கடந்த நிதியாண்டில், அதன் மின்சார உற்பத்தி 19 சதவீதம் அதிகரித்து, 2,920 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் துவங்கியதிலிருந்து இதுவரை, எந்த ஒரு நிதியாண்டிலும், இந்த அளவுக்கு அதிக உற்பத்தியை எட்டியதில்லை என,நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோக கோலா புதிய ஆலை
‘ஹிந்துஸ்தான் கோக கோலா பிவரேஜஸ்’ நிறுவனம், தெலுங்கானாவில், அதன் இரண்டாவது ஆலையை அமைக்க உள்ளது.இதற்காக, முதற்கட்டமாக 600 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா நிறுவனத்துக்கு ‘ஆர்டர்’
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 1,300 வர்த்தக வாகனங்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ‘வி.ஆர்.எல்., லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்திடமிருந்து, 1,300 நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்கான ஆர்டரை பெற்றிருப்பதாக, டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய ‘இ – ஸ்கூட்டர்’
‘பவுன்ஸ் இன்பினிட்டி’ நிறுவனம், அதன் முதல் மின்சார ஸ்கூட்டரை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. ‘இ1’ எனும் பெயரிலான இந்த மின்சார ஸ்கூட்டர்களை, ராஜஸ்தானில் உள்ள ஆலையில் தயாரித்துள்ளது. ஏப்ரல் 18 முதல் வினியோகம் துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|