பதிவு செய்த நாள்
12 ஏப்2022
02:32
புதுடில்லி ‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டாவதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
மேலும், தொழிற்சாலையை அமைப்பது சம்பந்தமாக, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.இந்நிறுவனத்துக்கு, தற்போது குஜராத்தில் ஒரு தொழிற்சாலை உள்ளது. அதன் உற்பத்தி திறனை, அடுத்த ஆண்டில், ஆண்டுக்கு 1.25 லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது.அத்துடன், 1.75 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் வகையில், இரண்டாவதாக ஓர் ஆலையை அமைத்து, மொத்த உற்பத்தியை, 3 லட்சமாக அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.
இதனையடுத்து, இரண்டாவது ஆலையை எங்கு அமைப்பது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.பல மாநில அரசுகள், ஆலை அமைக்க பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூன் மாதத்துக்குள்ளாக, எந்த மாநிலத்தில் ஆலையை அமைப்பது என்பது முடிவு ஆகிவிடும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஆலை உற்பத்திக்கு தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|