பதிவு செய்த நாள்
12 ஏப்2022
22:24
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த 16 மாதங்களில் இல்லாத உயர்வாகும். மேலும் ரிசர்வ் வங்கி இலக்கின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை விட அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை ஏற்றம், இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை 2 – 6 சதவீதம் வரை பராமரிக்க, ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தது மத்திய அரசு.
ஆனால், தொடர்ந்து மூன்றாவது மாதமாக, 6 சதவீதம் என்ற அதிகபட்ச வரம்பு தாண்டப்பட்டு உள்ளது. இது, பிப்ரவரியில் 6.07 சதவீதமாகவும்; ஜனவரியில் 6.01 சதவீதமாகவும் இருந்தது.தொழில் துறை உற்பத்தி நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு, கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு, சுரங்கத் துறை மற்றும் மின்சார துறை ஆகியவற்றில் உற்பத்தி அதிகரித்தது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில், இக்குறியீடு 3.2 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|