பதிவு செய்த நாள்
12 ஏப்2022
22:31
ரியல் எஸ்டேட்டில் முதலீடு
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடுகள், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், இரு மடங்கு அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், கிட்டத்தட்ட 8,350 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
100 கார்கள் பரிசு
சென்னையை சேர்ந்த ஐடியாஸ் டூ ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அதன் 100 தொழிலாளர்களுக்கு, கார்களை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நிலைத்த ஆதரவையும், ஒப்பிட முடியாத பங்களிப்பையும் வழங்கியதற்காக, இந்த பரிசை வழங்கி இருப்பதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘ஊபர்’ கட்டணம் அதிகரிப்பு
ஊபர் நிறுவனம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக, டில்லி தலைநகர் பிராந்தியத்தில், அதன் கட்டணத்தை 12 சதவீதம் அளவுக்கு உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக, அண்மையில் மும்பையில் 15 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை அதிகரித்து அறிவித்திருந்தது.
6வது இடத்தில் அதானி
‘அதானி’ குழுமத்தின் நிறுவனரான கவுதம் அதானி, உலகளவில் 6 வது பெரும் பணக்காரராகி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 8.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக, ‘புளூம்பெர்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட, அதானி சொத்து மதிப்பு 1.57 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ஜவுளி ஏற்றுமதி இலக்கு
நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2030ல், 100 பில்லியன் டாலராக அதாவது, 7.60 லட்சம் கோடி ரூபாயாக உயர இலக்கு வைக்க வேண்டும் என, வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில், ஜவுளி ஏற்றுமதி 3.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|