சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு ...   ‘இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை’ ‘இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை’ ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2022
22:31

ரியல் எஸ்டேட்டில் முதலீடு
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடுகள், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், இரு மடங்கு அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், கிட்டத்தட்ட 8,350 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

100 கார்கள் பரிசு

சென்னையை சேர்ந்த ஐடியாஸ் டூ ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அதன் 100 தொழிலாளர்களுக்கு, கார்களை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நிலைத்த ஆதரவையும், ஒப்பிட முடியாத பங்களிப்பையும் வழங்கியதற்காக, இந்த பரிசை வழங்கி இருப்பதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘ஊபர்’ கட்டணம் அதிகரிப்பு
ஊபர் நிறுவனம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக, டில்லி தலைநகர் பிராந்தியத்தில், அதன் கட்டணத்தை 12 சதவீதம் அளவுக்கு உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக, அண்மையில் மும்பையில் 15 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை அதிகரித்து அறிவித்திருந்தது.
6வது இடத்தில் அதானி
‘அதானி’ குழுமத்தின் நிறுவனரான கவுதம் அதானி, உலகளவில் 6 வது பெரும் பணக்காரராகி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 8.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக, ‘புளூம்பெர்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட, அதானி சொத்து மதிப்பு 1.57 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ஜவுளி ஏற்றுமதி இலக்கு
நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2030ல், 100 பில்லியன் டாலராக அதாவது, 7.60 லட்சம் கோடி ரூபாயாக உயர இலக்கு வைக்க வேண்டும் என, வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில், ஜவுளி ஏற்றுமதி 3.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)