பதிவு செய்த நாள்
19 ஏப்2022
02:29
புதுடில்லி, ஏப். 19-–
நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில், 14.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 14.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 4 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.காய்கறிகள் விலை குறைந்திருந்த போதிலும், கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளது.கடந்த 12 மாதங்களாகவே மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து இரண்டு இலக்கத்திலேயே உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 13.11 சதவீதமாக இருந்தது. இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த நவம்பரில், 14.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மார்ச் மாதத்தில் உக்ரைன் போர் பாதிப்பு காரணமாக, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ஆகியவற்றின் விலை அதிகரித்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|