காப்பீடு திட்டங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய ரைடர் வசதிகாப்பீடு திட்டங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய ரைடர் வசதி ...  புதிய பங்கு வெளியீட்டில் ‘கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ்’ புதிய பங்கு வெளியீட்டில் ‘கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ்’ ...
மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
02:29

புதுடில்லி, ஏப். 19-–

நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில், 14.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 14.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 4 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.காய்கறிகள் விலை குறைந்திருந்த போதிலும், கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளது.கடந்த 12 மாதங்களாகவே மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து இரண்டு இலக்கத்திலேயே உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 13.11 சதவீதமாக இருந்தது. இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த நவம்பரில், 14.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மார்ச் மாதத்தில் உக்ரைன் போர் பாதிப்பு காரணமாக, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ஆகியவற்றின் விலை அதிகரித்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)