பதிவு செய்த நாள்
19 ஏப்2022
02:29
புதுடில்லி, ஏப். 19–
மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.பங்கு வெளியீட்டின்போது, இந்நிறுவனம் 650 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 7.2 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் கடனை அடைக்கவும், மைசூரு, மானேசர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலதன செலவுகளுக்கும் பயன்படுத்தவும் உள்ளதாக, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகாவில் சாமராஜ் நகரில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கும் நிதியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம், மைசூரை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இந்நிறுவனத்துக்கு, கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, ஹிமாசலபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 8 ஆலைகள் உள்ளன. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 421 கோடி ரூபாய். நிகர லாபம் 9.73 கோடி ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|