ஐந்து நாட்களுக்கு பின் ஆறுதல் தந்த சந்தை ஐந்து நாட்களுக்கு பின் ஆறுதல் தந்த சந்தை ...  ‘பாரத் பெட்ரோலியம்’ பங்கு விற்பனை ‘பாரத் பெட்ரோலியம்’ பங்கு விற்பனை ...
புதிய பங்கு வெளியீடு எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2022
01:28

புதுடில்லி--–எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு எப்போது என்பது குறித்த முடிவை, இந்த வாரத்துக்குள் மத்திய அரசு எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.ஐ.சி., எப்போது புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது என்பது குறித்த முடிவை, இந்த வாரத்துக்குள் அரசு அறிவித்து விடும் என எதிர்பார்க்கலாம்.கடந்த மார்ச் மாதத்தில் பங்கு வெளியீட்டுக்கு வந்து விடலாம் என்று தான் முதலில் திட்டமிடப்பட்டது.ஆனால், புவிசார் அரசியல் பிரச்னைகள் காரணமாக, மார்ச்சில் வருவது தள்ளிப் போடப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, மே 12ம் தேதி வரை, ஏற்கனவே ‘செபி’யிடமிருந்து பெற்றிருக்கும் அனுமதியை வைத்தே, பங்கு வெளியீட்டுக்கு வந்துவிடலாம். அதன் பிறகு வருவது என்றால், புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும்.இது ஒருபுறமிருக்க, எப்போது பங்கு வெளியீட்டுக்கு வருவது என்பது குறித்து முடிவு எடுப்பது என்பது அரசுக்கு சவாலாகவே உள்ளது.

சில்லரை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நிலையை வைத்து, இப்போது வந்து விடலாம் என முடிவு எடுப்பதா அல்லது புவிசார் அரசியல் பிரச்னை, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் இருப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பங்கு வெளியீட்டை இன்னும் தள்ளிப்போடுவதா என்ற குழப்பம் உள்ளது.

எனினும், இந்த வாரத்தில் அரசு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். ஒருவேளை மே மாதத்துக்குள் வரப்போவதில்லை என முடிவு செய்துவிட்டால், பங்கு வெளியீடு ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப் போய்விடும். காரணம், செபிக்கு புதிதாக விண்ணப்பித்து, அனுமதி வாங்க வேண்டியதிருக்கும்.எது எப்படியாக இருப்பினும், இப்போதைய நிலவரப்படி பார்க்கும்போது, அரசு முதற்கட்டமாக, 5 சதவீதத்துக்கு மேல் பங்குகளை விற்க முன்வராது என்றே தெரிகிறது.

இப்போதைய உலகளாவிய சூழலில், பங்கு வெளியீட்டை பெரிய அளவில் நடத்த முடியாது. எனவே, அனேகமாக 5 சதவீதம் அல்லது 31.6 கோடி பங்குகளை மட்டுமே விற்பனை செய்யும் முடிவை அரசு எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஒருவேளை மே மாதத்துக்குள் வரப் போவதில்லை என முடிவு செய்துவிட்டால், பங்கு வெளியீடு ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப் போய்விடும். காரணம், செபிக்கு புதிதாக விண்ணப்பித்து, அனுமதி வாங்க வேண்டியதிருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)