பதிவு செய்த நாள்
23 ஏப்2022
00:10
ரிசர்வ் வங்கி துவக்கியது ஆய்வு
நடப்பு காலாண்டிற்கான வணிக நம்பிக்கையையும், அடுத்த மூன்று மாத காலத்திற்கான எதிர்பார்ப்புகளையும் மதிப்பிடுவதற்காக, தொழில்துறைக்கான காலாண்டு பார்வை குறித்த சர்வேயை துவக்கி விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த சர்வே, தயாரிப்பு துறையின் செயல்திறன் குறித்த பயனுள்ள தரவுகளை வழங்கும் என்றும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.பொதுத்துறை ஏலம் நிறுவனங்களுக்கு தடைமத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியின்போது, பிற பொதுத்துறை நிறுவனங்கள், அந்நிறுவனத்துக்கான ஏலத்தில் பங்கேற்க கூடாது என, மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளது.இத்தகைய ஏலத்தில், பிற பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்பது, அரசின் தனியார்மயமாக்கல் கொள்கையின் அடிப்படைக்கே எதிரானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஸொமாட்டோ பிளாஸ்டிக் மறுசுழற்சி'ஆன்லைன்' உணவு வினியோக நிறுவனமான 'ஸொமாட்டோ' நடப்பு ஏப்ரல் முதல், 100 சதவீத 'பிளாஸ்டிக் நியூட்ரல் டெலிவரி'களை அறிவித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் பெறும் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கில் 100 சதவீதத்தை, நிறுவனமே முன்வந்து மறுசுழற்சி செய்து சமன் செய்யும் என தெரிவித்துள்ளது.
'ஒன்வெப்'செயற்கைக்கோள் இணைப்பு'பார்தி' குழுமத்தின் பின்னணியில் செயல்பட்டு வரும், 'ஒன்வெப்' நிறுவனம், நாட்டில் செயற்கைக்கோள் சேவைகளை வழங்குவதற்கான அனுமதியை, அரசிடமிருந்து பெற்றுள்ளது.அடிப்படையில் பிரிட்டனை சேர்ந்த இந்நிறுவனம், இவ்வாண்டு மத்தியில், செயற்கைக்கோள் வாயிலான இணைப்பு சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பியூச்சர்' பங்குதாரர்கள் கூட்டம்பியூச்சர் குழுமம், அதன் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்கியவர்களுடனான சந்திப்பை நடத்தி முடித்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான 'ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்' நிறுவனத்துக்கு, 'பியூச்சர் ரீட்டெய்ல்' வணிகத்தை விற்பனை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்காக இந்த கூட்டம் அமேசான் எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|