பதிவு செய்த நாள்
23 ஏப்2022
00:01
மும்பை,-நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில், ஏற்றுமதி பழையபடி சூடுபிடித்துள்ளது. இத்துறையின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 54 சதவீதம் அதிகரித்து, 2.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் கோலின் ஷா கூறியுள்ளதாவது:கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், ஏற்றுமதி 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 2.98 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ஏற்றுமதி 4.33 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடைகள் நீங்க துவங்கியது, தேவைகள் அதிகரித்தது ஆகிய காரணங்களால், கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்துள்ளது. இத்துறையானது, உறுதி கொடுத்திருந்தபடி, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10 சதவீத பங்கை கடந்த நிதியாண்டில் பெற்றுக் கொடுத்துள்ளது.
மேலும், நறுக்கி மெருகூட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதியும் 62 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.இத்துறைக்கு தேவைப் படும் கூடுதல் கொள்கை ஆதரவுகளை அரசு வழங்கும்பட்சத்தில், இன்னும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|