தங்கம் வெள்ளி சந்தை தங்கம் வெள்ளி சந்தை ...  19 லட்சம் கோடி ரூபாயாக ‘ரிலையன்ஸ்’ மதிப்பு உயர்வு 19 லட்சம் கோடி ரூபாயாக ‘ரிலையன்ஸ்’ மதிப்பு உயர்வு ...
எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீடு அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2022
01:38

புதுடில்லி,–பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., மே 4ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பங்கு வெளியீடுகளில், இதுவே மிகப் பெரிய வெளியீடாகும்.முக்கியமான அம்சங்கள்:

 புதிய பங்கு வெளியீடு, மே 4ம் தேதி துவங்கி 9ம் தேதியுடன் முடிவடைகிறது

 ஒரு பங்கின் விலை 902 – 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

 பங்கு வெளியீட்டின் போது, 22.13 கோடி பங்குகள் அதாவது, 3.5 சதவீத பங்குகளை அரசு விற்பனை செய்ய உள்ளது

 இதன் வாயிலாக, 20 ஆயிரத்து, 557 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது

 இதற்கு முன், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், புவிசார் அரசியல் சூழல் காரணமாக, தற்போது 21 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது

 முதலீட்டாளர்கள், 15 பங்குகள் அல்லது மடங்கில் வாங்கலாம்

 பாலிசிதாரர்களுக்கு பங்கின் விலையில், 60 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்

 சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு, 45 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்

 பங்கு வெளியீட்டில், பாதி அளவு தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும்; 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும்; மீதி, சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படும்

 முதலீட்டாளர்களுக்கு, மே 12ம் தேதி பங்குகள் வழங்கப்படும்

 பங்குகள் கிடைக்காதவர்களுக்கு, அன்றைய தினமே பணம் திருப்பி வழங்கப்படும் மே 17ம் தேதியன்று, பங்குகள் சந்தைகளில் பட்டியலிடப்படும்

 இந்த பங்கு வெளியீட்டை ஒட்டி, ஏராளமானோர் ‘டிமேட்’ கணக்கை துவங்க முன்வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது

 இந்தியாவின் மிகப் பெரிய புதிய பங்கு வெளியீடு இதுவாகும். இதற்கு முன் அதிகபட்சமாக, ‘பேடிம்’ நிறுவனம், கடந்த ஆண்டில், 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிலான பங்கு வெளியீட்டுக்கு வந்தது

 தற்போதைய சந்தை சூழல்களை மனதில் கொண்டு, முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடாக இதை மேற்கொள்வது நலன் பயப்பதாக இருக்கும் என்கிறார்கள், நிபுணர்கள்.சந்தையின் தேவை, சந்தையின் ஏற்ற – இறக்கங்கள், உள்நாட்டு முதலீடுகள், நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டே, பங்கு வெளியீட்டுக்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.துஹின் காந்த பாண்டே, செயலர், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)